ஆரோக்கிய நிகேதனம்
உலகம் பிறந்ததிலிருந்து பிறப்பு இறப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இறப்பு என்பது நிகழ்ந்தே தீரும். ஆனாலும் மனிதன் மரணத்தை வெல்ல வேண்டும் , தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று எத்தனிக்கிறான். மதியின் தாய் போல. அனைத்தையும் விட்டுவிட்டு , நிரந்தர உறக்கத்திற்கு செல்ல வேண்டுமே என்று மார்பில் அறைந்து கொண்டு அழுகிறான். வநுவிஹாரியினை போல. கொரோனா காலத்தில் நவீன மருத்துவத்திற்கும் , மரபுசார் மருத்துவத்திற்கும் கடும் விவாதம் நிகழ்ந்தது. எனது நவீன மனத்தினால் , மரபுசார் மருத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் மரபுசார் மருத்துவத்தை இடது கையினால் தள்ளி ஒதிக்கி வைப்பது எந்த வகையில் அறிவியல் என்று சொல்ல முடியும். மரபுசார் மருத்துவம் மரணத்தை அணுகும் விதம் வேறு விதமானது. அகால மரணத்தை போன்ற துன்பம் வேறில்லை. ஆனால் , ஒரு கட்டத்திற்கு மேல் , முதிர்ந்து , கனிந்து , உதிர வேண்டும். புதியன முளைக்க வேண்டும். ஆனால் நவீன மருத்துவம் , மரணத்துடன் இறுதி வரை போர் புரிவது. ஒரு நாள் , மனிதனால் மரணத்தை வெல்ல முடியுமோ என்னமோ. ரங்கலால் டாக்டர் சொல்வது போல , மருத்துவர்களுக்கான தேவை இராது போகலாம். மனிதனை நிரந்தி...